காஞ்சிபுரம்:தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கிபூ சாகுபடி செய்வதன் மூலம், நல்ல லாபம் பார்க்க முடிகிறது என, சேந்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ளது சேந்தமங்கலம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை,38. இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம், "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கிபூ சாகுபடி செய்துள்ளார். நடவு செய்த, 90வது நாள் முதல் பூக்கத் துவங்கும், நன்கு பராமரிக்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து பூக்கும்.
பாசன அமைப்பு
ஐந்து அடி உயரத்தில் பைப்புகள் நின்ற நிலையில் பொருத்தி, அதன் மேல் பகுதியில், தண்ணீர் வெளியில் வரும் கையில், "பட்டர்பிளை ஸ்பிங்லர்' சுழல்கள் அமைக்கப்பட்டிருக்கும். குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது, பட்டர்பிளை ஸ்பிங்லர் சுழன்று தண்ணீரை தூவும்.
சம்பங்கி சாகுபடிக்கு நிலத்தில் லேசான ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும், செடி வீரியமாக வளரும். பட்டர்பிளை ஸ்பிங்லர் அமைக்க ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். நடவு செய்த அதே ஆண்டில் லாபத்தை ஈட்ட முடியாது.
இதுகுறித்து விவசாயி ஏழுமலை கூறுகையில், "வெளியூர் சென்றபோது, அங்கு தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடி செய்வதை பார்த்தேன். இதனால், அதேமுறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதற்கான, "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கி விதையை வாங்கி வந்து நடவு செய்தேன். இதற்கான செலவு, மற்ற பயிர்களைவிட கூடுதலாக தான் உள்ளது என்றாலும், லாபமும் அதிகம் தான்.
அதிக லாபம்
மேலும், பூவின் அளவும் பெரியதாகவே உள்ளது. அறுவடை செய்யப்படும் பூ, கிலோ 60 ரூபாய் முதல் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு விற்பனைக்காக காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்கிறேன். முகூர்த்த நாட்கள், திருவிழாக் காலங்களில், கிலோ 250 ரூபாய் வரையில் விற்கிறேன்.
இந்த சாகுபடி முடிந்து, வேறு பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என்றால், தெளிப்பு நீர் பைப்புகளை சேதாரமில்லாமல் அகற்றிவிட்டு, நிலத்தை நன்கு உழுதபின் மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இந்த தெளிப்பு நீர் பாசனத்தில், அனைத்து விதமான பயிர்களை சாகுபடி செய்யலாம்,' என்றார்.
thanksto dhinamalar
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ளது சேந்தமங்கலம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை,38. இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம், "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கிபூ சாகுபடி செய்துள்ளார். நடவு செய்த, 90வது நாள் முதல் பூக்கத் துவங்கும், நன்கு பராமரிக்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து பூக்கும்.
பாசன அமைப்பு
ஐந்து அடி உயரத்தில் பைப்புகள் நின்ற நிலையில் பொருத்தி, அதன் மேல் பகுதியில், தண்ணீர் வெளியில் வரும் கையில், "பட்டர்பிளை ஸ்பிங்லர்' சுழல்கள் அமைக்கப்பட்டிருக்கும். குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது, பட்டர்பிளை ஸ்பிங்லர் சுழன்று தண்ணீரை தூவும்.
சம்பங்கி சாகுபடிக்கு நிலத்தில் லேசான ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும், செடி வீரியமாக வளரும். பட்டர்பிளை ஸ்பிங்லர் அமைக்க ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். நடவு செய்த அதே ஆண்டில் லாபத்தை ஈட்ட முடியாது.
இதுகுறித்து விவசாயி ஏழுமலை கூறுகையில், "வெளியூர் சென்றபோது, அங்கு தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடி செய்வதை பார்த்தேன். இதனால், அதேமுறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதற்கான, "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கி விதையை வாங்கி வந்து நடவு செய்தேன். இதற்கான செலவு, மற்ற பயிர்களைவிட கூடுதலாக தான் உள்ளது என்றாலும், லாபமும் அதிகம் தான்.
அதிக லாபம்
மேலும், பூவின் அளவும் பெரியதாகவே உள்ளது. அறுவடை செய்யப்படும் பூ, கிலோ 60 ரூபாய் முதல் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு விற்பனைக்காக காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்கிறேன். முகூர்த்த நாட்கள், திருவிழாக் காலங்களில், கிலோ 250 ரூபாய் வரையில் விற்கிறேன்.
இந்த சாகுபடி முடிந்து, வேறு பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என்றால், தெளிப்பு நீர் பைப்புகளை சேதாரமில்லாமல் அகற்றிவிட்டு, நிலத்தை நன்கு உழுதபின் மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இந்த தெளிப்பு நீர் பாசனத்தில், அனைத்து விதமான பயிர்களை சாகுபடி செய்யலாம்,' என்றார்.
thanksto dhinamalar
No comments:
Post a Comment