Sunday, February 02, 2014

புதினா பயிரிட்டால் அதிக இலாபம்

 உணவு வகைகளின் மணமூட்டுவதற்கு புதினா மிகவும் பயன்படுகிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் அமிலத்தன்மையைப் போக்க வல்லதாகும். அரிய மருத்துவ குணம் கொண்டதாகும். இதுபோக, புதினாவின் தண்டு பகுதிலியிருந்தும் ஒரு வகை வாசனை எண்ணை எடுக்க பயன்படுகிறது. புதினாவில் பெயர் சொல்லும் வகையில் எந்த ரகமும் கிடையாது. ஆனால், மென்தா சிட்ரோட்டா, மென்தா ஸ்பைக்கேட்டா, மென்தா பைபிரேட்டா என்ற மூன்று வகை புதினாக்கள் எல்ல இடங்களிலும், சாகுபடி செய்ய உகந்ததாக உள்ளது. புதினா நன்றாக வளர நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலம் மற்றும் அதிக்க்க் கனிமச்சத்துக்கள் கொண்ட அமிலநிலம் மிகவும் ஏற்றதாகும். வெப்பமான பகுதியும், மித வெப்பமான பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்
.
     பதியம் போட்ட குச்சிகளையோ அல்லது வேர்விட்ட குச்சிகளையோ ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பின் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 10 கிலோ இட வேண்டும். முன்னதாக நிலத்தில் 10 டன் தொழு உரமிட்டு நன்றாக உழுது விட வேண்டும். மேலுரமாக 30 கிலோ தழைச்சதை இரண்டு முறை பிரித்துப் போட வேண்டும். வேர்விட்ட குச்சிகளை நட்டவுடன் உடனடியாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு வாத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
    தேவைக்கேற்ப களை எடுத்து , மண் அணைக்க வேண்டும்.நடவு செய்த 5 மாதம் கழித்து முதல் அறுவடை செய்யலாம். முதற்கட்டமாக புதினாவில் தண்டு முனைப்பகுதிகளை வெட்டுவதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. 5 மாதம் கழித்து அடுத்த கட்டமாக அறுவடை செய்ய வேண்டும். 4 வருடத்திற்கு 5 மாதம் இடைவெளியில் அறுவடை செய்து கொண்டிருக்கலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 15 முதல் 20 டன் வரை தண்டு  மற்றும் இலை மகசூல் கிடைக்கும். மேலும் ஒரு ஹெக்டேரில் 50 முதல் 75 கிலோ வரை புதினா எண்ணெய் கிடைக்கிறது.

No comments: