Wednesday, January 29, 2014

அங்கக வேளாண்மையில் களை மேலாண்மை

அங்கக வேளாண்மையில் களை மேலாண்மை
  • அங்கக களை மேலாண்மை பற்றி
  • சாகுபடி முறை
  • இயந்திர முறை
  • தெர்மல் (வெப்பம்) முறை
  • உயிரியல் முறை
அங்கக களை மேலாண்மை பற்றி :
களை இடையூரு என்பது வேளாண்மை ஆரம்பித்த நாள் முதல் இருக்கிறது. பயிர்களுக்கு கிடைக்கும் நீர் , ஊட்டச்சத்து , சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொண்டு , பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துகிறது. இராசயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இராசயனஙடகளை சுற்றிச் சூழலை பெரிதும் மாசு படுத்துகின்றன. அங்கக வேளாண் முறையில் , சுற்றுச் சூழலை பாதிக்காமல் , களைச் செடிகளை நீக்க முடியும். களைச் செடிகளை முற்றிலும் நீக்குவது சாத்தியமற்றது. மாறாக களை செடி எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வருவது எளிது.
களை கட்டுபாடு கொண்டுவர வேண்டிய முக்கிய தருணம்:

ஒவ்வொரு பயிர் வளர்ப்பின் போதும் , ஒரு சில முக்கிய தருணங்களில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் மிக அவசியம். இவ்வாறு செய்தால் , களை என்றுமே பயிர் வளர்பிற்கும் , மகசூலுக்கும் தொல்லை தராது. தோட்டக் கலைப் பயிர்கள் களைச் செடிகளால் பாதிக்கப் பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அப் பயிர்களுக்கு களை கட்டுப்பாடு தருணம் என்பது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும். மற்ற நேரங்களில் களைச் செடிகள் பயிர் வளர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
தோட்டக்கலை பயிர்களுக்கு களை கட்டுப்படுத்த வேண்டிய தருணங்கள் :
பயிர்
களை கட்டுபடுத்த வேண்டிய தருணம்
ஆப்பிள்
மே மற்றும் ஜீன்
முட்டை கோஸ்
பயிரிட்ட 3 வாரங்களுக்கு பிறகு
கேரட்
முளைத்த 3-6 வாரங்களுக்கு பிறகு
வெள்ளரி
விதைத்த 4 வாரங்களுக்கு பிறகு
லெட்யூஸ்
பயிரிட்ட 3 வாரங்களுக்குப் பிறகு
வெங்காயம்
முழுவதுமாக
உருளை
பயிரிட்ட 4 வாரங்களுக்கு பிறகு
ஸ்டிராபெர்ரி
மே மற்றும் ஜீன்
தக்காளி (நாற்று)
நடவு செய்த 36 நாட்களுக்கு பிறகு
தக்காளி (விதை)
விதைத்த 9 வாரங்களுக்கு பிறகு
சாகுபடி முறை :
பயிர் சுழற்சி :

பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்து பயிரிடும் முறையாகும். ஒரே பயிரை பயிரிடுவதால் களைச் செடிளின் ஆதிக்கம் அதிகமாகும். உழவு முறைகள் களை செடிகள் பரவுதலை இடையூருசெய்து , அவற்றை கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு பயிர் சுழற்சி களை கட்டுப்பாட்டை எளிமையாக்குகிறது.
பயிர் வகைகளை தேர்ந்தெடுக்கப்படும் பயிரைப் பொறுத்தே களைச் செடிகளின் தன்மை அமைகிறது. பயிர் சுழற்சியில் உருளைக் கிழங்கு பயிரைப் பயன்படுத்துவதன் மூலம் களைகளின் எண்ணிக்கை குறைகிறதுஇ அங்கக வேளாண்மை முறையைப் பயன்னடுத்துவோருக்கு , இது மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பயிர்சுழற்சியில் மண்ணில் வளம் மற்றும் அவற்றின் றிலை போன்றவை கருத்தில் கொள்ளப்படுகிறது. இதே போல் பயிர்கள் மற்றும் களைகள் மண்ணிலுள்ள சத்துக்களை அற்த அளவுக்குப் பயன்படுத்த படுகிறது. பயிர் சுழற்சியில் கொஞ்சும் தரிசு முயையையும் (பயிர் சாகுபடி செய்யாமல்) பயன்படுத்துவதன் மூலம் நீண்ட கால களைச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்
மூடு பயிர்:
சில பயிர்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும் தன்மையுடையன. இவை நிலத்தை மூடுவது போல வளர்ந்து களை வளர்ச்சியை தடுக்க வல்லது. சிவப்பு கிராம்பு , எண்ணெய் விதைச் செடிகள் , தீவனப் பயிர்கள் , முள்ளங்கி போன்றவை களை வளர்ப்பைக் கட்டுபடுத்தலாம்.
ஊடு பயிர்கள் :
        பயிர் வரிசைக்கு இடையில் , களைச் செடிகளை கட்டுப்படுத்த வளர்த்தப்படும் பயிர் , ஊடு பயிர் எனப்படும்.
நிலத்தை மேற் பார்வையிடுதல் :
          களைச் செடி பற்றின விவரங்களை (களைச் செடி அடர்த்தி , வளர்ச்சி வேகம் , பருவம்) சேகரித்து அதை களை மேலாண்மை திட்டமிடுதலுக்கு பயன்படுத்துவது மிக அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் பயிரிழப்பையும் , மகசூல் பாதிப்பையும் தவிர்க்க உதவும்.
நிலப் போர்வை :
          நிலர்போர்வை , நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முலைப்பதை தவிர்க்க வல்லது. ஒளி ஊடுருவதை தடுப்பதால். களைச் செடிகள் கட்டுப்படுகின்றன.
அவற்றின் வகைகள் :
  • வாழும் நிலப் போர்வைகள் :
நிலததின் மட்டதிற்கு அருகில் அடர்த்தியாக வளரும் தாவர வகைகள் இவை. எ.டு. கிராம்பு. இவை முக்கிய பயிருடன் போட்டியிடுவதி்லை. இவை களை , பூச்சி தொல்லைகளைக் கட்டுப்படுத்தும். மண் வளத்தையும் பெருக்கும்.
அங்கக நிலப்போர்வைகள்:
வைக்கோல் புல், மரப்பட்டை , மட்கிய குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நிலப்போாவையாக பயப்படுத்தலாம். இரண்டு அடுக்கு செய்தித்தாளை பயிர் வரிசையின் இடையில் விரிந்து அதன் மேல் ஒரு அடுக்கு புல் பரப்புதல் ஒரு வகை வழக்கம். வைக்கோல் புல் , களை விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம். இவை மட்கக் கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்தூர மரங்களின் இலை , பணை ஒலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் நிலப் போர்வைகள், தாவரங்களுக்குத் தேவையான ஒளியை தனது நுண்ணிய இடைவெளிகளினூடே நிலத்திற்கு அளிக்கிறது.
பயிர் வகை தேர்ந்தெடுதல்
களைக் கட்டுப்படுத்துவதில் பயிர் வகையும் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் பயிர் , சறறு அடர்த்தியாக வளர்ந்து , பயிர் வரிசைக்கு உள்ள இடைவெளியை தனது நிழலால் நிரப்பக் கூடியது, அதனால் அவை நிச்சயமாக களை வளர்ப்பை கட்டுப்படுத்தும’். களைச் செடிகள் நிழலின்றி வளர இயலாது.

உழவு முறை :
களை வித்துக்கள் உழவு முறைக்குத் தகுந்தாற் போல் பரவிக்கிடக்கும். பொதுவபக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்ட 5 செ.மீ ஆழம் வரை ஊடுருவியிக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துகள் சீராக பரவியிருக்கும். இவ்வாறு உழவு  முறையின் அடிப்படையில் களை வித்துகளின்  பரவுத்தன்மை  விநியோகம் , வளர்ச்சி ஆகியவற்றை தீர்மானம் செய்யலாம்.

சுகாதாரம்:
சுகாதாரமாக இருத்தல் புதிய களைச் செடிகள் பரவாமலிருக்க உதவும். சுத்தமான பயிர் வித்துகளை உபயோகித்தல், புல் வெட்டுதல் , முழுவதுமாக மட்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல் , வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல் , இது போன்ற முறைகளை பின் பற்றினால் , களைத் தொல்லையை தவிர்க்கலாம்.சுத்தமான கலப்பைகள் மற்றும் இயந்திரங்களை இபயோகித்தலும் அவசியம். சுத்தமான , தரம் வாய்ந்த வித்துகளை பயிரிடுவது நல்ல பலளைத் தரும்.

தழைச் சத்து வளம்:
இராசயன தழைச்சத்து உரம், பயிர் மற்றும் களை வளர்ச்சியை பாகுபாடின்றி ஊக்குவிக்கும் களைச் செடிகள் , பயிர் செடிகளைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து விடும். ஆனால் பசுந் தலை உரம் களைச் செடி வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. அவை மண்ணில் மெதுவாக தழைச் சத்தினை வெளியிடுதல் , வேண்டாத களைச் செடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

பயிர்களுக்கு ஊட்டமளியுங்கள் , களைக்கு அல்ல :
பயிர் நடுவதற்கு முன்பாக நிலத்திற்கு கரையும் வகை உரம் / ஊட்டச்சத்துக் களை அளித்தல் தவறு. அவை களை வளர்ச்சியை வெகுவாக தூண்டக் கூடியது.
  • பயிர் வரிசையின் அருகில் உரமிடுதல் நன்று. அவை களைச் செடிகளை சென்றடையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அங்கக உர மூட்டைகளை , பயிர்களழன் அருகில் வைத்தல் சற்றே  விலையுயர்ந்த முறையாகும். இதில் பயிர்களுக்குமட்டுமே ஊட்டச்சத்து சென்றடையும். அவை சீராகவும் , மெதுவாகவும் பயிருக்கு அளிக்கப்படும்.
நீர் மேலாண்மை :
களைச் கட்டுப்படுத்துதலில் , நீர் மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது.

களை வித்துகளை முளைக்கச் செய்தல் :
பயிர் விதைதலுக்கு ஒரு சில நாட்களுக்கும் முன்பாக நீர் பாய்ச்சி , களை வித்துகளை முளைக்கச் செய்தல் , களை மேலாண்மையில் ஒரு வளையாகும். அவ்வாறு முளைத்த களைச் செடிகளை அகற்றிவிட்டு, விரைவாக பயிர் செடிகளை நடுதல் வேண்டும். இது தட்ப வெப்ப நிலை மாற்றத்தினால் முளைக்கும் களைத் தொல்லையை தவிர்க்க உதவும்.

ஈரப் பதத்திற்கு தகுந்தாற் போல் விதைத்தல் :
இம்முறையஜல் மேல் கூறியது போல, களைச் செடிகளை அகற்றி நிலத்தை காய விட வேண்டும். அவை நிலப் போர்வை போல் அமைந்துவிடும். பயிர் விதைக்கும் பொழுது , விதைக்குமிடத்தில் , காய்ந்த மண்ணை  அகற்றி விட்டு ஈரப்பதமான மண்ணில் விதைக்க வேண்டும். பெரிய விதை கொண்ட காய்களை , சோனம், பீன்ஸ் போன்றவற்றை இவ்வாறு விதைக்கலாம். இவை முளைத்த , அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு நிழல் தந்து, களை வளர்ச்சியைக் கட்டுபடுத்தும்.

சொட்டு நீர் பாசனம் :
சொட்டு நீர் பாசன முறையில் , நீர் பயிர் செடிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் களைச் செடிகள் நீரின்றி வளர இயலாது.

இயந்திர களைச் செடி கட்டுப்படுத்தும் முறை:
இந்த முறை அதிக நேரம் பிடிக்கும் மற்றும் விலையுயர்ந்த முறையாகும். பயிர் வகை , களைச் செடி  எண்ணிக்கை , வகை இவற்றின் அடிப் படையில் இயந்திர முறை மாறுபடும். களைச் செடி எண்ணிக்கை , மண்ணில் உள்ள களை வித்து எண்ணிக்கையின் அடிப்படியில் மாறுபடும். ஆகவே மண்ணில் உள்ள வித்துகளை ஆராய்ந்து அறிதலின் மூலம் நாம் களைச் செடி எண்ணிக்கையை ஊகித்து அவற்றைக் கட்டுப் படுத்த முடியும்.
இயந்திர களையெடுக்கும் கருவிகள் சில -களைச் கொத்து, கொத்துக் கலப்பை / கிளறி , புல்வெட்டி , நெருஞ்சில் களை எடுப்பான் போன்றவையாகும். தூரிகை களையெடுப்பான் கருவி காய் பயிர்களுக்கு உகந்தது. களைச் கொத்து , தனிச் செடிகளுக்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது. இயந்திர களை யெடுக்கும் கருவிகளை பயன் படுத்திய பிறகு, களைச் கொத்து கொண்டும் களை அகற்றலாம்.

தெர்மல் (வெப்பம்) முறை :
          தீ மூட்டிகள் களை தடுப்பிற்கு பயனளிக்கும். பயிர் விதை முளைக்கும் முன்பு இதை பயன்படுத்தலாம். நெருப்பு ஏற்படுத்தும் வெப்பம் , உயிரணுக்களை விரிவடையச் செய்து அவற்றை முற்றிலும் அழித்துவிடுகிறது.
ப்ரோபேனை எரி பொருளாகக் கொண்டு தீமூட்டிகள், களைச் செடிகளை எரித்துச்  சாம்பலாக மாற்றாது. அதற்கு மாறாக செல்களின் வெப்பநிலை அதிகரிக்கபட்டு அவை விரிவடையச் செய’கிறது.இதனால் உயிரணுக்களின் (செல்களின்) சுவர் கிழிக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன.
இயந்திர களையெடுக்கும் கருவிகளை அதிக ஈரப்பதமுள்ள நிலத்தில் பயன்படுத்த முடியாது. அது போன்ற இடங்களில் தீ மூட்டிகளைப் பயன்படுத்தலாம். முட்டைகோஸ் நாத்து உள்ள வயல்களிலும் வழக்கத்தை  பின்பற்றலாம். அவை வெப்பத்தை சற்று தாங்கக் கூடியவை. காற்று குறைவாக உள்ள இடங்களில் வெப்பம் களைச் செடிகளை நன்றாக சென்றடையும். மாலை இதற்கு உகந்த நேரங்களாகும்.
மண் வெப்பமூட்டல்:
வெயில் மற்றும் குளிர் காலங்களின் போது , அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் சுத்தீகரிக்கிறார்கள். இதில் , பிளாஸ்டிக் விரிப்புகளை , உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம் , களை விதைகளை அழித்து விடும்.

அகச் சிவப்புக் கதிர் களையெடுக்குங் கருவி :
இவை தீமூட்டியை போன்று செயல் படுகிறது. அகச் சிவப்புக் கதிர்கள் சுலபமாக வெப்பத்தை அதிகரிக்கக் கூடியவை. சில களையெடுக்கும் கருவிகள்  இக்கதிருடன் சேர்ந்து தீயையும் களை அகற்றத்திற்குப் பயன்படுத்துகிறது.

உறைதல்:
திரவ நிலை நைட்ரோஜன் மற்றும் உறைப் பனிக்கட்டிகள் களை கட்டுப்பாட்டிற்கு உபயோகப் படுத்துகின்றனர்.

உயிரியல் களை கட்டுப் படுத்தும் முறைகள்:
  1. தாவர சுரப்பிகளால் ஏற்படும் பாதிப்பு :
ஒரு வித்து முளைக்கும் பொழுதோ , வளரும்பொழுதோ சில திரவியங்களை வெளியிடும். அவை அருகிலிருக்கும் தாவரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திரவியம் வெளியிடும் செடியின் நிலையை உணர்த்தும்.
இவ்வாறு திரவம் வெளியிடும் செடிகள் அருகிலிருக்கும் செடிகளை தொடர்புகொள்ளும் என்பது ஆச்சர்யமான உண்மை. பார்லி , ரை, ஓட்ஸ், சோளம் , குதிரைமசால், சிவப்பு கிராம்பு , சூரியகாந்தி, கோதுமை மற்றும் தோட்டக்கலை பயிர்களான முள்ளங்கி, கேரட், முருங்கை ஆகியவை திரவ சுரப்பிகளால் அருகில் உள்ள தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை.
நலம் பயக்கிற நுண்ணுயிர்கள் :
          களைச் செடிகளும் நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையுடையவை யாகும். இவ்வாறு களைச் செடிகளில் நோய் உண்டாகும் நுண்ணுயிரிகளை பயிர் மேலாண்மைக்கு பயன்படுத்தலாம். இயற்கை எதிரிகளைக் கொண்டும் களைச் செடிகளுக்கு பாதிப்பு உண்டபக்கலாம். பூஞ்சை  களைச் கொல்லிகள் கொண்டு களை அகற்றல் முறையை மேம்படுத்த உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை களைச் செடிகளை மட்டுமே அழிக்கும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், களைச் செடிகளை அழிக்க முடியும்.
வ.எண்
களைச் செடியின் பெயர்
களைச் செடிகளின் உயிர் கொல்லி
  1.  
கோரைப் புல்
பேக்டிரா வெருட்டானா
  1.  
முசர் கட்டிலை
நீள வண்டு
  1.  
பார்த்தீனியம்
டீலோநீமியா ஸ்குருப்புலோசா
  1.  
சப்பாத்திக் கள்ளி
செதில் பூச்சி
  1.  
ஆகாய தாமரை (நீர்ப்பூங்கோரை)
நீர்ப்பூங் கோரை கூன்வண்டு , வெட்டுக்கிளி.
  1.  
நெருஞ்சி
மைக்ரோ லேரினஸ் லிப்பிபார்மிஸ்
களை கட்டுபாட்டில் மீன்களின் பங்கு
களையின் பெயர்
மீன்
  1. லெம்மா , ஹைட்ரில்லா
  2. பாசி
புல் கொண்ட
வெள்ளிக் கெண்டை , சாதாக் கெண்டை

தொடர்புடைய களைகள் :

          களைச் செடிகளை கட்டுபடுத்த சில “தொடர்புடைய களைகள்” எனும் போட்டிச் செடிகளை வளர்க்கலாம். அவை களைகளுக்கு போட்டியாக அமைந்து ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு விடும்.
களையின் செடியின் பெயர்
போட்டிச் செடிகள்
  1. பார்த்தீனியம்
  2. டைபா
கருவேலம் மரம்
பிராக்கியேரியா

வர்த்தக ரீதியான நுண்ணுயிர் களைக் கொல்லி :
வ.எண்.
வணிகப் பெயர்
நோய் காரணி
தாக்குதலுக்கு உள்ளாகும் களை
  1.  
டிவைன்
பைட்டோப்த்தோரா பால்மிவோரா
ஸ்டிராங்கிளர் வைன்
  1.  
கெல்லகோ
கொல்லட்டிரைக்கம் கிலியோஸ்போரைட்ஸ்
தக்கைப் பூண்டு
  1.  
பையோபோலாரிஸ்
பையோபோலாரிஸ் சொர்கிகோலா
சோளக் குடும்பத்தை சேர்ந்தகளை
  1.  
பையோபோலாஸ்
ஸ்டிரெப்டோமைசஸ் ஷெக்ரோஸ்கோபியஸ்
பொதுவான செடிகளுக்கு
  1.  
லுபாஓ 11
கொல்லடேடிரைக்கம் கிலியோஸ்போரைட்ஸ்
கொடிய குண்டால் (கஸ்குடா)
  1.  
ஏ பி ஜி 5003
செர்கோஸ்போரா ரோட்மாணி
ஆகாயதாமரை

: இயற்கை வழி விவசாயத்திற்கு சில உத்திகள்

இந்த உத்திகள் தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு பயிர்களில் செய்து பார்த்து வெற்றி பெற்ற உத்திகளாகும். ஆனாலும் இந்த உத்திகளே முடிவானவைகள் அல்ல. நம்முடைய விவசாயத்தை மேலும் உயர்த்தக்கூடிய உத்திகள் பல உள்ளன. இன்று நாம் செய்து வருகின்ற பல்வேறு வகையான பயிர்களில் இந்த உத்திகளை கடைபிடித்து வெற்றி பெறுவதே நம்முடைய முதல் வேலையாக இருக்கும். அந்த வெற்றிக்கு பிறகு மேலும் உள்ள உத்திகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும்.
குறிப்பிட்டுள்ள உத்திகளை உங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னே பின்னே சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவைகளை மேலும் உங்களுடைய அனுபவ அறிவைக் கொண்டு செழுமை அடைய செய்யலாம். எடுத்துக்காட்டாக பல பயிர் விதைப்பை பயிர் செய்வதற்கு முன்பே பயிரிட்டு மடக்கி உழவேண்டும் என்பதே ஆரம்பத்தில் கூறப்பட்ட உத்தியாக இருந்தது. ஆனால் விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில்  பயிர்களுக்கு இடையே வளர்த்து, அறுத்து மூடாக்காக பயன்படுத்துகின்றனர். இது விவசாயி தன்னுடைய  சூழலை ஒட்டி அறிவை பயன்படுத்தியதால் ஒரு பலனை மட்டும் தரக்கூடிய உத்தியை பல பலன்கள் தருகின்ற உத்தியாக மாற்றிய அறிவாண்மையாகும்.
இது போல் நீங்கள் செழுமை செய்த உத்திகளையும் கண்டறிந்த புதிய உத்திகளையும் பல்கலை கழகத்திற்க தெரிவிக்கும் பொழுது எல்லா விவசாயிகளையும் அடைவதற்கு ஏதுவாக அமையும். குறிப்பிட்டுள்ள உத்திகளை பயன்படுத்தி பெற்ற அனுபவங்களும் மற்றோருக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.
இயற்கை விவசாயத்தில் எல்லைக்கோடு இல்லை. ஆனால் ஆரம்ப அடியாக எடுத்து வைக்கின்ற  முதல் அடிக்கு இந்த உத்திகள் ஊன்றுகோலாய் அமையும்.
1. மண் வளம்
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.
அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.
1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2.  உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3.  இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.
2. அமுத கரைசல்
இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.
தேவைப்படும் பொருட்கள் :
  1. பத்து லிட்டர் தண்ணீர்            2.  ஒரு கிலோ சாணம்            3. ஒரு லிட்டர்  மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.
ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.
ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.
3. மூலிகைப் பூச்சி விரட்டி
உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு  ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்.
பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.
கால்நடைகளில் மாட்டூட்டம்
ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.
 4. மீன் அமிலம்
உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து  பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.
5. முட்டை ரசம்
இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21  முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.
6. பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி
ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி  நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.
உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.
பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன
பல பயிர் வதைகள்

தானிய விதைகள்
சோளம் – 500 கிராம், கம்பு – 100 கிராம், தினை – 200 கிராம், சாமை – 250 கிராம், வரகு – 300 கிராம், குதிரை வாலி – 250 கிராம், பனிவரகு – 200 கிராம் போன்றவற்றில் ஏதேனும் நான்கு
பயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
வாசனைப் பொருட்கள்சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ
உரச்செடிகள்சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ. போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து ( 20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.
கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.
7. ஊட்டமேற்றிய தொழு உரம்
தேவைப்படும் பொருட்கள்
சாணம்                        : 100 கிலோ
கோமியம்        : 25 லிட்டர்
புளித்த தயிர்   : 5 லிட்டர்
நீர்                    : 100 லிட்டர்
கலந்த கலவை.
செய்முறை : 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல்  10% கரைசலை தெளிக்கவும்.
இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.
8. தேங்காய் பால் + மோர்
இவைகளை  சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில்  நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.
9. பயிர் பாதுகாப்பு
நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.
பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை
பயிர் பாதுகாப்பு முறைகள்
1.மூலிகைப் பூச்சிவிரட்டி
2. உயிர் வழிக்கட்டுபாடு
3. பயிர் வழிக்கட்டுப்பாடு
4. ஈர்ப்புப் பயிர்கள்
5. ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு
மூலிகை பூச்சி விரட்டி
ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர்  சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். காதி சோப்பு வில்லை 2ஐச் சோ்த்தல் நல்லது.
பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.
10. உயிரியல் கட்டுப்பாடு
உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் பூச்சி கட்டுப்பாடு

எதிரி பூச்சி
கட்டுப்படுத்தும் பூச்சி
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்கரும்பு – இளங்குருத்துப்புழு, இடைக்கணு புழு
நெல் – இலை சுருட்டுப் புழு
பருத்தி – இளஞ்சிவப்பு காய்புழு, புள்ளிக்காய் புழு
டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம்கரும்பு – நுனி குருத்துப்புழு
நெல் - குருத்துப்பூச்சி
பிரகானிட்தென்னை – கருந்தலை புழு
ரெட் வீயூட் பக் (வண்டு)பல பயிர்களில் புழுக்களை அழிக்கும்.
நுண்ணுயிரிகள்
டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.
11. உயிரின வழிக் கட்டுப்பாடு
இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.
12. பயிர் வழிக் கட்டுப்பாடு
சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.
ஈர்ப்புப் பயிர்கள்
சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.
முன்னோர்கள்  ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.
13. ஒருங்கிணைந்த  பயிர் பாதுகாப்பு உத்திகள்
1. பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
2. பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
3. கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
4. அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
5. பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
6. விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
7. இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
8. பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
9. மூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

இயற்கை வழி விவசாயத்திற்கு சில உத்திகள்

இந்த உத்திகள் தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு பயிர்களில் செய்து பார்த்து வெற்றி பெற்ற உத்திகளாகும். ஆனாலும் இந்த உத்திகளே முடிவானவைகள் அல்ல. நம்முடைய விவசாயத்தை மேலும் உயர்த்தக்கூடிய உத்திகள் பல உள்ளன. இன்று நாம் செய்து வருகின்ற பல்வேறு வகையான பயிர்களில் இந்த உத்திகளை கடைபிடித்து வெற்றி பெறுவதே நம்முடைய முதல் வேலையாக இருக்கும். அந்த வெற்றிக்கு பிறகு மேலும் உள்ள உத்திகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும்.
குறிப்பிட்டுள்ள உத்திகளை உங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னே பின்னே சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவைகளை மேலும் உங்களுடைய அனுபவ அறிவைக் கொண்டு செழுமை அடைய செய்யலாம். எடுத்துக்காட்டாக பல பயிர் விதைப்பை பயிர் செய்வதற்கு முன்பே பயிரிட்டு மடக்கி உழவேண்டும் என்பதே ஆரம்பத்தில் கூறப்பட்ட உத்தியாக இருந்தது. ஆனால் விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில்  பயிர்களுக்கு இடையே வளர்த்து, அறுத்து மூடாக்காக பயன்படுத்துகின்றனர். இது விவசாயி தன்னுடைய  சூழலை ஒட்டி அறிவை பயன்படுத்தியதால் ஒரு பலனை மட்டும் தரக்கூடிய உத்தியை பல பலன்கள் தருகின்ற உத்தியாக மாற்றிய அறிவாண்மையாகும்.
இது போல் நீங்கள் செழுமை செய்த உத்திகளையும் கண்டறிந்த புதிய உத்திகளையும் பல்கலை கழகத்திற்க தெரிவிக்கும் பொழுது எல்லா விவசாயிகளையும் அடைவதற்கு ஏதுவாக அமையும். குறிப்பிட்டுள்ள உத்திகளை பயன்படுத்தி பெற்ற அனுபவங்களும் மற்றோருக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.
இயற்கை விவசாயத்தில் எல்லைக்கோடு இல்லை. ஆனால் ஆரம்ப அடியாக எடுத்து வைக்கின்ற  முதல் அடிக்கு இந்த உத்திகள் ஊன்றுகோலாய் அமையும்.
1. மண் வளம்
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.
அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.
1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2.  உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3.  இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.
2. அமுத கரைசல்
இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.
தேவைப்படும் பொருட்கள் :
  1. பத்து லிட்டர் தண்ணீர்            2.  ஒரு கிலோ சாணம்            3. ஒரு லிட்டர்  மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.
ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.
ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.
3. மூலிகைப் பூச்சி விரட்டி
உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு  ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்.
பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.
கால்நடைகளில் மாட்டூட்டம்
ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.
 4. மீன் அமிலம்
உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து  பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.
5. முட்டை ரசம்
இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21  முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.
6. பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி
ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி  நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.
உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.
பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன
பல பயிர் வதைகள்

தானிய விதைகள்
சோளம் – 500 கிராம், கம்பு – 100 கிராம், தினை – 200 கிராம், சாமை – 250 கிராம், வரகு – 300 கிராம், குதிரை வாலி – 250 கிராம், பனிவரகு – 200 கிராம் போன்றவற்றில் ஏதேனும் நான்கு
பயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
வாசனைப் பொருட்கள்சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ
உரச்செடிகள்சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ. போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து ( 20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.
கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.
7. ஊட்டமேற்றிய தொழு உரம்
தேவைப்படும் பொருட்கள்
சாணம்                        : 100 கிலோ
கோமியம்        : 25 லிட்டர்
புளித்த தயிர்   : 5 லிட்டர்
நீர்                    : 100 லிட்டர்
கலந்த கலவை.
செய்முறை : 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல்  10% கரைசலை தெளிக்கவும்.
இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.
8. தேங்காய் பால் + மோர்
இவைகளை  சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில்  நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.
9. பயிர் பாதுகாப்பு
நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.
பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை
பயிர் பாதுகாப்பு முறைகள்
1.மூலிகைப் பூச்சிவிரட்டி
2. உயிர் வழிக்கட்டுபாடு
3. பயிர் வழிக்கட்டுப்பாடு
4. ஈர்ப்புப் பயிர்கள்
5. ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு
மூலிகை பூச்சி விரட்டி
ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர்  சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம். காதி சோப்பு வில்லை 2ஐச் சோ்த்தல் நல்லது.
பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.
10. உயிரியல் கட்டுப்பாடு
உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் பூச்சி கட்டுப்பாடு

எதிரி பூச்சி
கட்டுப்படுத்தும் பூச்சி
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்கரும்பு – இளங்குருத்துப்புழு, இடைக்கணு புழு
நெல் – இலை சுருட்டுப் புழு
பருத்தி – இளஞ்சிவப்பு காய்புழு, புள்ளிக்காய் புழு
டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம்கரும்பு – நுனி குருத்துப்புழு
நெல் - குருத்துப்பூச்சி
பிரகானிட்தென்னை – கருந்தலை புழு
ரெட் வீயூட் பக் (வண்டு)பல பயிர்களில் புழுக்களை அழிக்கும்.
நுண்ணுயிரிகள்
டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.
11. உயிரின வழிக் கட்டுப்பாடு
இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.
12. பயிர் வழிக் கட்டுப்பாடு
சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.
ஈர்ப்புப் பயிர்கள்
சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.
முன்னோர்கள்  ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.
13. ஒருங்கிணைந்த  பயிர் பாதுகாப்பு உத்திகள்
1. பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
2. பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
3. கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
4. அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
5. பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
6. விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
7. இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
8. பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
9. மூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

செயல்மிகு நுண்ணுயிரிகள்

வீரியம் மிக்க நுண்ணுயிரி 

1.வீரிய மிக்க நுண்ணுயிரி என்றால் என்ன
2.வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு
3.வீரியம் மிக்க நுண்ணுயிரியை தயாரிக்கும் முறை

1.வீரிய மிக்க நுண்ணுயிரி என்றால் என்ன

நுண்ணுயிரிகள் ஒரு சிறிய கூறு அது மிகச் சிறியதாகக் காணப்படும். அவைகளை நாம் எளிதாக பார்க்க இயலும். சுற்றுப்புறவியலுக்கு சமநிலைப்படுத்துவது மிகக் கடினம். இவை இரசாயன முறை மற்ற நுண்ணுயிரிகளுக்கும், மனிதர்களுக்கும் வாழ உதவி புரியும். இவைகள் நுண்ணுயிரி உலகிற்கு தோழனாகும். இவை உபயோகமுள்ள நுண்ணுயிரிகளாகும். நோய்க்காரணிகள் கெடுதி விளைவிக்கும், மற்றும் நோய் அழுகல் மற்றும் மாசுகளை உருவாக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரின் தோற்றம்
1982 ல் டாக்கடர். ஷிகா, ரியூகியஸ் பல்கலைக்கழகம், ஒக்கினாவா ஜப்பான், புதிதாக நலம் பயக்கிற நுண்ணுயிரியை கண்டுபிடித்துள்ளார். இதில் உயிர்ப்பூட்டும் திறன், புணருத்தாரணம் மற்றும் பாதுகாக்கும் திறன் உள்ளது. இந்த குழுவிற்கு இவர் வீரிய மிக்க நுண்ணுயிரி என்று பெயரிட்டார்.

வீரிய மிக்க நுண்ணுயிரியைப் பயன்படுத்தி பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை
இந்தக் கலவை நச்சுத் தன்மை இல்லாத இரசாயன பூச்சி விரட்டி, தோட்டத்தில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும். இது செடிகளுக்கு தடையரணாக இருந்து பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும். இந்தக் கலவையில் பூண்டு, மிளகு அல்லது சோற்றுக்  கற்றாலையை சேர்த்தால் பூச்சி விரட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும். இவைகளை சிறிது சிறிதாக நறுக்கியோ அல்லது மசித்தோ கலவையில் சேர்க்க வேண்டும்.

கலவைக்கு
வெது வெதுப்பான நீர் (க்ளோரின்) : 300 மி.லி.
வெல்லப்பாகுக் கழிவு: 50 மி.லி.
இயற்கை வினீகர்  : 50 மி.லி.      
விஸ்கி அல்லது எத்தில் ஆல்கஹால் : 50 மி.லி.
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவம்  : 50 மி.லி.

இதனைக் கலப்பதற்கு தேவையான அளவு கொள்கலனை தேர்ந்தெடுக்க வேண்டும். மூடி மற்றும் புனலுடன் கூடிய ப்ளாஸ்டிக் புட்டியில் சேமித்து வைக்கவும். வெல்லப்பாகுக் கழிவை வெது வெதுப்பான நீரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் வினீகர், விஸ்கி மற்றும் வீரிய மிக்க நுண்ணுயிரியின் திரவத்தை சேர்க்கவும். இந்தக் கலவையை ப்ளாஸ்டிக் புட்டியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு நறுக்கிய பூண்டை சேர்க்கவும். முடிந்தளவு இறுக்கமாக முத்திரையிட்டு வெது வெதுப்பான இருட்டான இடத்தில் வைக்கவும். புட்டியில் வாயு உருவாகும் ஒரு நாளைக்கு இரண்டு முறை புட்டியின் மூடியைத் திறந்து வாயுவை வெளியேற்றவும். வாயு உருவாவது நின்று பழம் போன்று நறுமணம் வந்தால் வீரிய மிக்க நுண்ணுயிரி பயன்படுத்த தயாரிகிவிடும். கலவையை இருட்டான இடத்தில் ஒரே சீரான வெப்பநிலையில் மூன்று மாதங்கள் சேமித்து வைக்கவும். பூண்டு சாறு பயன்படுத்தினால் சேமித்து வைப்பதற்கு முன்பு அதனை வடிகட்டி விடவும். குளிர்ப்பதனப்பெட்டியில் சேமித்து வைக்கக் கூடாது.

வீரிய மிக்க நுண்ணுயிரியின் பூச்சி விரட்டிக் கலவையை பயன்படுத்தும் முறை
20 மி.லி. கலவையை 2 லிட்டர் சுத்தமான நீரில் கரைத்து தெளிப்பானில் கலக்கவும். பயிர்கள் ஈரமாகும் வரை கலவையை தெளிக்கவும். தெளிப்பானை விதை முளைப்பு அல்லது செடி முளைக்கும் போதோ மற்றும் பூச்சிகள் நோய்கள் தென்படும் 30 மி.லி. கரைசலை, 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை காலையில் அல்லது கன மழையின் பின்பு தெளித்தால் நல்ல விளை பயனைக் காணலாம்.

வீரிய மிக்க நுண்ணுயிரி ஒரு இயற்கையான பொருள்
வீரிய மிக்க நுண்ணுயிரி ஒரு வணிக முத்திரை இந்த குறிப்பிட்ட கலவையை நலம் பயக்கிற உயிரிகளுக்கு பயன்படுத்தலாம்.
வீரிய மிக்க நுண்ணுயிரி உயிர் வளி நுண்ணுயிர் (உயிர் வாழ ஆக்சிஜன் தேவை) மற்றும் காற்றில்லாமல் வாழும் நுண்ணுயிரி (உயிர் வாழ ஆக்சிஜன் தேவையில்லை) இவை இரண்டும் இணைந்து பரிமாற்ற நலனை தருகின்றது (கூட்டு வாழும் முறை).
வீரிய மிக்க நுண்ணுயிரி மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளுடன் இணைந்துவிடும். இவை இணைந்து மண்ணின் தரத்தை உயர்த்தப்பயன்படும்.
வீரிய மிக்க நுண்ணுயிரிகள் நச்சுத் தன்மை அல்லது நோய்க் காரணிகள் இல்லாத ஒன்று. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரின் செயல்
தற்பொழுதைய ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் வீரிய மிக்க நுண்ணுயிரியின் ஊட்டம் மண் மூலம் பரவும் நோய்க்காரணிகளை அடக்கி வைக்கும். அங்கக கழிவுகளை முடுக்கிவிடும் கனிம ஊட்டத்தை அதிகப்படுத்தும். இது செடிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நலம் பயக்கிற நுண்ணுயிரிகளின் செயல்கள் அதிகமாகும்.
(எ.கா): மைக்கார்ஹிசா, காலக நிலையாக்க பாக்டீரியா, இதனால் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை குறைத்து விடும். வீரிய மிக்க நுண்ணுயிரி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பயனை அதிகப்படுத்தி கேடு விளைவிப்பதை முடக்கிவிடும்.

வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை பயன்படுத்தும் முறை
செறிவூட்டப்பட்டது
தழை தெளிப்பான்
சுத்தமான தெளிப்பானை வைத்து வாரம் ஒரு முறை செடிகள் ஈரமாகும் வரை செடிகளின் மேல் நேரிடையாக தெளிக்கவும். இதை காலை வேலையில் அல்லது மாலையில் தெளிக்கவும். அப்பொழுது தான் நல்ல விளைப்பயனும், இலைகள் வாடாமலும் இருக்கும்.

மண்ணில் செயல்பாடு
மண்ணில் கரைசலை சொட்டு சொட்டாக விட்டு மண்ணை நனைக்கவும். முதிர்ந்த செடிகளுக்கு தகுந்தவாறு கரைசலை பயன்படுத்தவும். அங்கக பொருட்கள் உரங்களை மண்ணில் இடும் முன் வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கலந்து பயன்படுத்தவும்.

நிலத்தைத் தோண்டாமல் தோட்டப்பயிர் செய்வதற்கான முறை
ஓர் ஆண்டு களைச்செடி, புல் அல்லது மிச்சமான பயிர் வகைகளை குறைந்தது 5 செ.மீ. அளவிற்கு நிலத்தில் இருந்து வெட்டவும். பின் அதை மண்ணில் மூடாக்கு போட்டு நட்டவும். வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை வாரம் ஒரு முறை மூடாக்கின் மேலும், செடியின் மேலும் தெளிக்கவும்.

உரத்தின் செயல்பாடு
உரக்குவியலை பயன்படுத்தினால் துர்நாற்றம் மற்றும் ஈக்களின் பிரச்சனை குறைந்து நல்ல தரமான வளர்ச்சியைக் கொடுக்கும். கை தெளிப்பானில் தெளித்தால் அதிகப்படியான உரக் குவியலின் ஈரப்பதத்தை குறைக்கலாம். இதனை அனைத்து வகையான புதிய பொருட்களின் மேலும் முடிந்தால் தெளிக்கலாம்.

தோட்டப்பயிர்களுக்கு பயன்படும் வீரிய மிக்க நுண்ணுயிரி
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவமாக இருக்கும் இந்நிலையில் உள்ள நுண்ணுயிரிகள் உயிருடன் இருக்கும் ஆனால் செயலற்று இருக்கும். இது ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் மிதமான வினீகர் புளித்த மாவின் போன்ற மனம் வீசும். திரவத்தின் காரநிலையின் அளவு 3.5 வீரிய மிக்க நுண்ணுயிரியை செயல்படுத்த அதை சுத்தமான க்ளோரின் இல்லாத நீரில் கரைத்து பயன்படுத்தவும். பின் வீரிய மிக்க நுண்ணுயிரின் கரைசல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தை உருவாக்கி மிதமான மனத்தைக் கொடுக்கும்.

எங்கே வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை பயன்படுத்தலாம்
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை தழை தெளிப்பாக பயிர்களை நடவு செய்வதற்கு முன்பு பயன்படுத்தவும். அல்லது வளரும் பழங்கள், காய்கறிப்பயிர்கள் மற்றும் அலங்காரப் பயிர்களின் மேல் தெளிக்கலாம். தோட்டத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தெளிக்கலாம் அல்லது உரக் குவியல் மட்டமான மண் இருக்கும் இடத்தில் தெளிக்கலாம்.

வீரிய மிக்க நுண்ணுயிரியை பயன்படுத்தும் முறை
க்ளோரின் இல்லாத சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 மி.லி. வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை கலந்து தோட்டத்தில் தெளிக்கவும். ஒரு சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இது தான் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்ச அளவாகும். வீரிய மிக்க நுண்ணயிரியின் செயலை அதிகப்படுத்துவது எப்படி
  • 10 லிட்டர் தண்ணீர் குவளை
  • 10 லிட்டர் க்ளோரின் இல்லாத தண்ணீர் (தண்ணீரை 24 மணி நேரம் நீரில் உள்ள க்ளோரின் ஆவியாகும் வரை வைத்திருக்க வேண்டும்)
  • 10-20 மி.லி. செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரி
  • 10-20 மி.லி.செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரி
  • 10-20 மி.லி. சர்க்கரைப்பாகு
தேவைப்பட்டால் சர்க்கரைப்பாகு அல்லது கரும்பு சர்க்கரையை சிறிது சூடான தண்ணீரில் முதலில் சேர்த்து கலக்கவும். பிறகு சர்க்கரைப்பாகு அல்லது கரும்பு சர்க்கரையை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாகக் கலக்கவும். செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரியை சர்க்கரைப்பாகு, தண்ணீர் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வீரிய மிக்க நுண்ணயிரி சர்க்கரைப்பாகை உணவு மூலக்கூறாக எடுத்துக்கொண்டு விரைவாக செயல்படத் தொடங்கி விடும்.
கலவையை நேரிடையாக சூரிய ஒளியில் வைக்காமல் வெப்பமான இடத்தில் 1-2 மணி நேரம் வைத்தால் தான் வீரிய மிக்க நுண்ணுயிரி முழுவதுமாக தயாராகும். ஒரு சதுர மீட்டர் அளவிற்கு ஒரு லிட்டர் பயன்படுத்தவும். இந்தக் கரைசலை சேமித்து வைக்கக் கூடாது. இவைகளை குறைந்த நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

வீரிய மிக்க நுண்ணுயிரியை மண்ணில் பயன்படுத்திய பின் வரும் பயன்கள்

கரிமங்களில் விலங்குகளின் உரம் மற்றும் உரங்களில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவை ஆரம்பத்தில் மண்ணில் இடும் போது நல்ல பயனைத் தரும். விரைவாக மண்ணில் முதலில் இருக்கும் நுண்ணுயிரியை மீறி இவை பயன்தரும் உரத்தில் உள்ள நுண்ணுயிரியின் பயன்கள் மிகக் குறைந்த நாட்களுக்கே. வீரிய மிக்க நுண்ணுயிரின் பயன்களும் இதைப் போன்றே. ஆனால் வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள் அதிக எண்ணிக்கையில் பயனுள்ள நுண்ணுயிரிகளை உருவாக்கும். அதனால் மண்ணில் அதிகக் காலம் இருக்கும்.
வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள் மண்ணில் மூன்று செயல்பாடுகளாக விரிவடையும் 8-10 நாட்கள் இடைவெளியில் நடவு நட்டிய பின் முதல் 3-4 வாரங்களில் பயன்தரும். இளம் நாற்றுகள் வறட்சி, வெப்பம், களை மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை வீரிய மிக்க நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இதனை தடுத்து பயிர்களை பாதுகாக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரி சீரிய வளர்ப்பு மற்றும் கரிமங்கள்
வீரிய மிக்க நுண்ணுயிரி சீரிய வளர்ப்பு சிறப்பாக பயன்பட உதவும். பண்ணைக் கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகளின் நாற்றத்தை குறைத்து, துரிதப்படுத்தும், வீரிய மிக்க நுண்ணுயிரி பண்படுத்துதல் என்றால் வீரிய மிக்க நுண்ணுயிரி பொக்காசி இதை உணவு கரிம உரமாக பயன்படுத்த உதவும் மற்றும் இதர உரம் தயாரிக்கும் பொருட்களுக்கு பயன்படுத்த உதவும். வீரிய மிக்க நுண்ணுயிரி பொக்காசி புளிக்கவைத்த உரம் இது மரத்தூள் மற்றும் கோதுமை தவிட்டினால் தயாரிக்கப்பட்டது.  சரியான முறையில் வீரிய மிக்க நுண்ணுயிரி தயாரானால் புளிக்க வைக்க முறைகள் தொடங்கி உணவு மற்றும் கரிமப்பொருட்கள்  உரமாக மாறிவிடும்.

மண் மற்றும் பயிர்களில் வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள்
வீரிய மிக்க நுண்ணுயிரியை அனைத்து வகையான மண் மற்றும் பயிர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நல்ல பயனுள்ள விளைவைத் தந்துள்ளது. இது மற்று மேலாண்மையுடன் மாற்றாக இருக்காது. வீரிய மிக்க நுண்ணுயிரி தொழில்நுட்பம் நல்ல மண்ணை தரும். பயிர் மேலாண்மையில் பயிர் சுழற்சி, உரம் உபயோகிப்பது, பயிர் மறுசுழற்சி மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, இதை சரியாகப் பயன்படுத்தினால் வீரிய மிக்க நுண்ணுயிரி மண் வளத்தை அதிகரித்து பயிர்களின் வளர்ச்சி, பூ, பழங்கள் உருவாவது மற்றும் பழங்கள் பழுப்பதற்கு பயன்படும். பயிர்களின் மகசூலை அதிகப்படுத்தும் மற்றும் பயிர்களின் தரத்தை உயர்த்தி உதவும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகி மண்ணில் இருக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நியூசுலாந்தில் இந்த வீரிய மிக்க நுண்ணுயிரிக்கு பையேர்கரோ அங்கீகரிக்கப்பட்ட அங்ககப் பொருளாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

களை, பூச்சி மற்றும் நோய்களுக்கு வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள்
வீரிய மிக்க நுண்ணுயிரி பூச்சிக்கொல்லி கிடையாது. இது கரியமற்ற இரசாயனமாகும். மண் மற்றும் செடிகளில் புதிதாக பயனுள்ள நுண்ணுயிரியைப் பயன்படுத்தும் போது இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். பூச்சி மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இயற்கை மூலம் நுண்ணுயிரிகளின் உதவியால் எதிர்த்து கட்டுப்படுத்திவிடும்.

2.வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு

வீரிய மிக்க நுண்ணுயிரியில் உணவு தரம் உயிர்வளி மற்றும் உயிர்வளியற்ற நுண்ணுயிரிகள்: ஒளிச்சேர்க்கை பாக்டீரியா, லேக்டோபேசில்லஸ், ஸ்ட்ரெப்டோமைசிட்ஸ், ஏக்டினோமைசிட்ஸ், ஈஸ்ட், நுண்ணுயிரிகளின் திரிபு பொதுவாக நுண்ணுயிரி வைப்பகத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் இருக்கும். 1999ல் ஏழு சிறு தொழில் அங்கக உரப்பிரிவுகளில் வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படுவதை மையான்மாரில் பயன்படுத்துகின்றனர். இதை நடத்துவது பெண்களின் வளர்ச்சிக் குழு. பிரிவில் 9 குழிகள் உள்ளன.  அவை 180 செ.மீ. (நீளம்) 120 செ.மீ.(அகலம்) 90 செ.மீ.(ஆழம்) இவைகளை அடி சுவர் மூலம் சுற்றிக் கட்டி, மேல் கூரை போட்டு இருக்கும்.

மூலப்பொருட்கள்
  • அங்கக உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்
  • மாட்டு சாணம் - 2 பங்கு
  • நெல் உமி - 1 பங்கு
  • நெல் உமி - கரித்துண்டு - 1 பங்கு
  • நெல் தவிடு - 1 பங்கு
  • ஊக்கி - 33 லிட்டர் வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல் அல்லது ட்ரைக்கோடெர்மா கரைசல் குழி
3.வீரிய மிக்க நுண்ணுயிரியை தயாரிக்கும் முறை
ஒரு லிட்டர் முதலில் தயார் செய்து வைத்திருந்த கரைசல் இதில் 10 மி.லி வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல், 40 மி.லி. சர்க்கரைப்பாகு மற்றும் 950 மி.லி.தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதை வெப்பநிலையைப் பொருத்து 5-7 நாட்கள் வரை வைத்திருக்கவும். பின் அதில் 1 லி சர்க்கரைப்பாகு மற்றும் 93 லிட்டர்.  தண்ணீர் சேர்த்து 100 லிட்டர் வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசலை பயன்படத்த தயார் செய்யவும். இந்த அளவு மூன்று குழிகளுக்கு போதுமானது. இவை ஊக்கியாக பயன்பட்டு உரத்தின் காலத்தை மூன்று மாதத்தில் இருந்து ஒரு மாதமாகக் குறைந்துவிடும்.

செயல்முறை
ஊக்கியைத் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும். 15 செ.மீ. அளவு கலவையை குழிக்குள் பரவலாக ஊற்றவும். ஊக்கியை வைத்து தெளிக்க வேண்டும். இதே செயல்முறையை குழி நிரம்பும் வரை செய்யவும். ப்ளாஸ்டிக் தாளைக் கொண்டு குழியை மூடவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து முழுக் குழியும் உயிர்வளியுள்ள உரமாக தயாராகிவிடும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு உரம் பயன்படுத்த தயாராகிவிடும். ஒரு தொகுதிக்கு ஒரு குழியில் 900 கிலோ வரை உருவாகும். பொதுவாக ப்ளாஸ்டிக் பைகளில் 30 கிலோ வரை மூட்டைக் கட்டப்படுகின்றன.  30 நாட்களில் ஒரு தொகுதிக்கு உருவாகும். அதில் 8 குழிகள் மட்டும் தொழில்நுட்பத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு உற்பத்தியின் அளவு 86.4 டன்கள் (0.9 டன்கள் X குழிகள் X 12 மாதங்கள்).

மூலப்பொருட்கள்
  • உரம் தயாரிப்பதற்கான தேவையான மூலப்பொருட்கள்
  • நெல் வைக்கோல்
  • பண்ணை வெளி உரம்
  • யூரியா உரம்
  • வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல்
செயல்முறை
வைக்கோல் குவியல் 20 செ.மீ. உயரம், 1 மி அகலம் மற்றும் 5 செ.மீ. நீளம் என்ற அளவில் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி குவியலாக உருவாக்கவும். ஒரு பகுதி குவியல் 5 மீ (நீளம் ) X1 மீ (அகலம்) X1 மீ (உயரம்) என்ற அளவில் இருக்கவும். குவியலின் மேல் தண்ணீரை தெளிக்கவும் அப்பொழுது தான் சமமான ஈரப்பதம் கிடைக்கும். இதைத் தொடர்ந்து உரத்தின் அடுக்கை 5 செ.மீ உயர்வுபடுத்தவும். பின் கைநிறைய யூரியாவை (100-200.) தெளிக்கவும். வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசலை மையான்மாரில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை போலவே தயார் செய்யவும். அதை தெளித்தால் உயிர்வளியுள்ள உரமாக தயராகிவிடும்.
இந்த செயல்முறையை குவியல் 1 மீ உயர்வாக வரும் வரை தொடர்ந்து செய்யவும் பின் அதை ப்ளாஸ்டிக் தாளை வைத்து மூடி வைக்கவும். இந்தக் குவியல் இரண்டு வாரங்களில் திரும்பிவிடும் மறுபடியும் ஒரு வாரத்திற்குப் பின் திரும்பிவிடும். இரண்டு வாரத்திற்குப் பிறகு குவியல் குளிர்ந்தவுடன் குவியலின் உயரம் 70 செ.மீட்டராக குறைந்தவுடன் உரம் பயன்படுத்த தயாராகிவிடும்.

ஆதாரம்:
www.fao.org
http://www.ccc.govt.nz/

செயல்மிகு நுண்ணுயிரிகள்

வீரியம் மிக்க நுண்ணுயிரி 

1.வீரிய மிக்க நுண்ணுயிரி என்றால் என்ன
2.வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு
3.வீரியம் மிக்க நுண்ணுயிரியை தயாரிக்கும் முறை

1.வீரிய மிக்க நுண்ணுயிரி என்றால் என்ன

நுண்ணுயிரிகள் ஒரு சிறிய கூறு அது மிகச் சிறியதாகக் காணப்படும். அவைகளை நாம் எளிதாக பார்க்க இயலும். சுற்றுப்புறவியலுக்கு சமநிலைப்படுத்துவது மிகக் கடினம். இவை இரசாயன முறை மற்ற நுண்ணுயிரிகளுக்கும், மனிதர்களுக்கும் வாழ உதவி புரியும். இவைகள் நுண்ணுயிரி உலகிற்கு தோழனாகும். இவை உபயோகமுள்ள நுண்ணுயிரிகளாகும். நோய்க்காரணிகள் கெடுதி விளைவிக்கும், மற்றும் நோய் அழுகல் மற்றும் மாசுகளை உருவாக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரின் தோற்றம்
1982 ல் டாக்கடர். ஷிகா, ரியூகியஸ் பல்கலைக்கழகம், ஒக்கினாவா ஜப்பான், புதிதாக நலம் பயக்கிற நுண்ணுயிரியை கண்டுபிடித்துள்ளார். இதில் உயிர்ப்பூட்டும் திறன், புணருத்தாரணம் மற்றும் பாதுகாக்கும் திறன் உள்ளது. இந்த குழுவிற்கு இவர் வீரிய மிக்க நுண்ணுயிரி என்று பெயரிட்டார்.

வீரிய மிக்க நுண்ணுயிரியைப் பயன்படுத்தி பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை
இந்தக் கலவை நச்சுத் தன்மை இல்லாத இரசாயன பூச்சி விரட்டி, தோட்டத்தில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும். இது செடிகளுக்கு தடையரணாக இருந்து பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும். இந்தக் கலவையில் பூண்டு, மிளகு அல்லது சோற்றுக்  கற்றாலையை சேர்த்தால் பூச்சி விரட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும். இவைகளை சிறிது சிறிதாக நறுக்கியோ அல்லது மசித்தோ கலவையில் சேர்க்க வேண்டும்.

கலவைக்கு
வெது வெதுப்பான நீர் (க்ளோரின்) : 300 மி.லி.
வெல்லப்பாகுக் கழிவு: 50 மி.லி.
இயற்கை வினீகர்  : 50 மி.லி.      
விஸ்கி அல்லது எத்தில் ஆல்கஹால் : 50 மி.லி.
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவம்  : 50 மி.லி.

இதனைக் கலப்பதற்கு தேவையான அளவு கொள்கலனை தேர்ந்தெடுக்க வேண்டும். மூடி மற்றும் புனலுடன் கூடிய ப்ளாஸ்டிக் புட்டியில் சேமித்து வைக்கவும். வெல்லப்பாகுக் கழிவை வெது வெதுப்பான நீரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் வினீகர், விஸ்கி மற்றும் வீரிய மிக்க நுண்ணுயிரியின் திரவத்தை சேர்க்கவும். இந்தக் கலவையை ப்ளாஸ்டிக் புட்டியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு நறுக்கிய பூண்டை சேர்க்கவும். முடிந்தளவு இறுக்கமாக முத்திரையிட்டு வெது வெதுப்பான இருட்டான இடத்தில் வைக்கவும். புட்டியில் வாயு உருவாகும் ஒரு நாளைக்கு இரண்டு முறை புட்டியின் மூடியைத் திறந்து வாயுவை வெளியேற்றவும். வாயு உருவாவது நின்று பழம் போன்று நறுமணம் வந்தால் வீரிய மிக்க நுண்ணுயிரி பயன்படுத்த தயாரிகிவிடும். கலவையை இருட்டான இடத்தில் ஒரே சீரான வெப்பநிலையில் மூன்று மாதங்கள் சேமித்து வைக்கவும். பூண்டு சாறு பயன்படுத்தினால் சேமித்து வைப்பதற்கு முன்பு அதனை வடிகட்டி விடவும். குளிர்ப்பதனப்பெட்டியில் சேமித்து வைக்கக் கூடாது.

வீரிய மிக்க நுண்ணுயிரியின் பூச்சி விரட்டிக் கலவையை பயன்படுத்தும் முறை
20 மி.லி. கலவையை 2 லிட்டர் சுத்தமான நீரில் கரைத்து தெளிப்பானில் கலக்கவும். பயிர்கள் ஈரமாகும் வரை கலவையை தெளிக்கவும். தெளிப்பானை விதை முளைப்பு அல்லது செடி முளைக்கும் போதோ மற்றும் பூச்சிகள் நோய்கள் தென்படும் 30 மி.லி. கரைசலை, 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை காலையில் அல்லது கன மழையின் பின்பு தெளித்தால் நல்ல விளை பயனைக் காணலாம்.

வீரிய மிக்க நுண்ணுயிரி ஒரு இயற்கையான பொருள்
வீரிய மிக்க நுண்ணுயிரி ஒரு வணிக முத்திரை இந்த குறிப்பிட்ட கலவையை நலம் பயக்கிற உயிரிகளுக்கு பயன்படுத்தலாம்.
வீரிய மிக்க நுண்ணுயிரி உயிர் வளி நுண்ணுயிர் (உயிர் வாழ ஆக்சிஜன் தேவை) மற்றும் காற்றில்லாமல் வாழும் நுண்ணுயிரி (உயிர் வாழ ஆக்சிஜன் தேவையில்லை) இவை இரண்டும் இணைந்து பரிமாற்ற நலனை தருகின்றது (கூட்டு வாழும் முறை).
வீரிய மிக்க நுண்ணுயிரி மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளுடன் இணைந்துவிடும். இவை இணைந்து மண்ணின் தரத்தை உயர்த்தப்பயன்படும்.
வீரிய மிக்க நுண்ணுயிரிகள் நச்சுத் தன்மை அல்லது நோய்க் காரணிகள் இல்லாத ஒன்று. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரின் செயல்
தற்பொழுதைய ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் வீரிய மிக்க நுண்ணுயிரியின் ஊட்டம் மண் மூலம் பரவும் நோய்க்காரணிகளை அடக்கி வைக்கும். அங்கக கழிவுகளை முடுக்கிவிடும் கனிம ஊட்டத்தை அதிகப்படுத்தும். இது செடிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நலம் பயக்கிற நுண்ணுயிரிகளின் செயல்கள் அதிகமாகும்.
(எ.கா): மைக்கார்ஹிசா, காலக நிலையாக்க பாக்டீரியா, இதனால் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை குறைத்து விடும். வீரிய மிக்க நுண்ணுயிரி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பயனை அதிகப்படுத்தி கேடு விளைவிப்பதை முடக்கிவிடும்.

வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை பயன்படுத்தும் முறை
செறிவூட்டப்பட்டது
தழை தெளிப்பான்
சுத்தமான தெளிப்பானை வைத்து வாரம் ஒரு முறை செடிகள் ஈரமாகும் வரை செடிகளின் மேல் நேரிடையாக தெளிக்கவும். இதை காலை வேலையில் அல்லது மாலையில் தெளிக்கவும். அப்பொழுது தான் நல்ல விளைப்பயனும், இலைகள் வாடாமலும் இருக்கும்.

மண்ணில் செயல்பாடு
மண்ணில் கரைசலை சொட்டு சொட்டாக விட்டு மண்ணை நனைக்கவும். முதிர்ந்த செடிகளுக்கு தகுந்தவாறு கரைசலை பயன்படுத்தவும். அங்கக பொருட்கள் உரங்களை மண்ணில் இடும் முன் வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கலந்து பயன்படுத்தவும்.

நிலத்தைத் தோண்டாமல் தோட்டப்பயிர் செய்வதற்கான முறை
ஓர் ஆண்டு களைச்செடி, புல் அல்லது மிச்சமான பயிர் வகைகளை குறைந்தது 5 செ.மீ. அளவிற்கு நிலத்தில் இருந்து வெட்டவும். பின் அதை மண்ணில் மூடாக்கு போட்டு நட்டவும். வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை வாரம் ஒரு முறை மூடாக்கின் மேலும், செடியின் மேலும் தெளிக்கவும்.

உரத்தின் செயல்பாடு
உரக்குவியலை பயன்படுத்தினால் துர்நாற்றம் மற்றும் ஈக்களின் பிரச்சனை குறைந்து நல்ல தரமான வளர்ச்சியைக் கொடுக்கும். கை தெளிப்பானில் தெளித்தால் அதிகப்படியான உரக் குவியலின் ஈரப்பதத்தை குறைக்கலாம். இதனை அனைத்து வகையான புதிய பொருட்களின் மேலும் முடிந்தால் தெளிக்கலாம்.

தோட்டப்பயிர்களுக்கு பயன்படும் வீரிய மிக்க நுண்ணுயிரி
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவமாக இருக்கும் இந்நிலையில் உள்ள நுண்ணுயிரிகள் உயிருடன் இருக்கும் ஆனால் செயலற்று இருக்கும். இது ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் மிதமான வினீகர் புளித்த மாவின் போன்ற மனம் வீசும். திரவத்தின் காரநிலையின் அளவு 3.5 வீரிய மிக்க நுண்ணுயிரியை செயல்படுத்த அதை சுத்தமான க்ளோரின் இல்லாத நீரில் கரைத்து பயன்படுத்தவும். பின் வீரிய மிக்க நுண்ணுயிரின் கரைசல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தை உருவாக்கி மிதமான மனத்தைக் கொடுக்கும்.

எங்கே வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை பயன்படுத்தலாம்
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை தழை தெளிப்பாக பயிர்களை நடவு செய்வதற்கு முன்பு பயன்படுத்தவும். அல்லது வளரும் பழங்கள், காய்கறிப்பயிர்கள் மற்றும் அலங்காரப் பயிர்களின் மேல் தெளிக்கலாம். தோட்டத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தெளிக்கலாம் அல்லது உரக் குவியல் மட்டமான மண் இருக்கும் இடத்தில் தெளிக்கலாம்.

வீரிய மிக்க நுண்ணுயிரியை பயன்படுத்தும் முறை
க்ளோரின் இல்லாத சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 மி.லி. வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை கலந்து தோட்டத்தில் தெளிக்கவும். ஒரு சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இது தான் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்ச அளவாகும். வீரிய மிக்க நுண்ணயிரியின் செயலை அதிகப்படுத்துவது எப்படி
  • 10 லிட்டர் தண்ணீர் குவளை
  • 10 லிட்டர் க்ளோரின் இல்லாத தண்ணீர் (தண்ணீரை 24 மணி நேரம் நீரில் உள்ள க்ளோரின் ஆவியாகும் வரை வைத்திருக்க வேண்டும்)
  • 10-20 மி.லி. செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரி
  • 10-20 மி.லி.செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரி
  • 10-20 மி.லி. சர்க்கரைப்பாகு
தேவைப்பட்டால் சர்க்கரைப்பாகு அல்லது கரும்பு சர்க்கரையை சிறிது சூடான தண்ணீரில் முதலில் சேர்த்து கலக்கவும். பிறகு சர்க்கரைப்பாகு அல்லது கரும்பு சர்க்கரையை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாகக் கலக்கவும். செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரியை சர்க்கரைப்பாகு, தண்ணீர் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வீரிய மிக்க நுண்ணயிரி சர்க்கரைப்பாகை உணவு மூலக்கூறாக எடுத்துக்கொண்டு விரைவாக செயல்படத் தொடங்கி விடும்.
கலவையை நேரிடையாக சூரிய ஒளியில் வைக்காமல் வெப்பமான இடத்தில் 1-2 மணி நேரம் வைத்தால் தான் வீரிய மிக்க நுண்ணுயிரி முழுவதுமாக தயாராகும். ஒரு சதுர மீட்டர் அளவிற்கு ஒரு லிட்டர் பயன்படுத்தவும். இந்தக் கரைசலை சேமித்து வைக்கக் கூடாது. இவைகளை குறைந்த நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

வீரிய மிக்க நுண்ணுயிரியை மண்ணில் பயன்படுத்திய பின் வரும் பயன்கள்

கரிமங்களில் விலங்குகளின் உரம் மற்றும் உரங்களில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவை ஆரம்பத்தில் மண்ணில் இடும் போது நல்ல பயனைத் தரும். விரைவாக மண்ணில் முதலில் இருக்கும் நுண்ணுயிரியை மீறி இவை பயன்தரும் உரத்தில் உள்ள நுண்ணுயிரியின் பயன்கள் மிகக் குறைந்த நாட்களுக்கே. வீரிய மிக்க நுண்ணுயிரின் பயன்களும் இதைப் போன்றே. ஆனால் வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள் அதிக எண்ணிக்கையில் பயனுள்ள நுண்ணுயிரிகளை உருவாக்கும். அதனால் மண்ணில் அதிகக் காலம் இருக்கும்.
வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள் மண்ணில் மூன்று செயல்பாடுகளாக விரிவடையும் 8-10 நாட்கள் இடைவெளியில் நடவு நட்டிய பின் முதல் 3-4 வாரங்களில் பயன்தரும். இளம் நாற்றுகள் வறட்சி, வெப்பம், களை மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை வீரிய மிக்க நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இதனை தடுத்து பயிர்களை பாதுகாக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரி சீரிய வளர்ப்பு மற்றும் கரிமங்கள்
வீரிய மிக்க நுண்ணுயிரி சீரிய வளர்ப்பு சிறப்பாக பயன்பட உதவும். பண்ணைக் கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகளின் நாற்றத்தை குறைத்து, துரிதப்படுத்தும், வீரிய மிக்க நுண்ணுயிரி பண்படுத்துதல் என்றால் வீரிய மிக்க நுண்ணுயிரி பொக்காசி இதை உணவு கரிம உரமாக பயன்படுத்த உதவும் மற்றும் இதர உரம் தயாரிக்கும் பொருட்களுக்கு பயன்படுத்த உதவும். வீரிய மிக்க நுண்ணுயிரி பொக்காசி புளிக்கவைத்த உரம் இது மரத்தூள் மற்றும் கோதுமை தவிட்டினால் தயாரிக்கப்பட்டது.  சரியான முறையில் வீரிய மிக்க நுண்ணுயிரி தயாரானால் புளிக்க வைக்க முறைகள் தொடங்கி உணவு மற்றும் கரிமப்பொருட்கள்  உரமாக மாறிவிடும்.

மண் மற்றும் பயிர்களில் வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள்
வீரிய மிக்க நுண்ணுயிரியை அனைத்து வகையான மண் மற்றும் பயிர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நல்ல பயனுள்ள விளைவைத் தந்துள்ளது. இது மற்று மேலாண்மையுடன் மாற்றாக இருக்காது. வீரிய மிக்க நுண்ணுயிரி தொழில்நுட்பம் நல்ல மண்ணை தரும். பயிர் மேலாண்மையில் பயிர் சுழற்சி, உரம் உபயோகிப்பது, பயிர் மறுசுழற்சி மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, இதை சரியாகப் பயன்படுத்தினால் வீரிய மிக்க நுண்ணுயிரி மண் வளத்தை அதிகரித்து பயிர்களின் வளர்ச்சி, பூ, பழங்கள் உருவாவது மற்றும் பழங்கள் பழுப்பதற்கு பயன்படும். பயிர்களின் மகசூலை அதிகப்படுத்தும் மற்றும் பயிர்களின் தரத்தை உயர்த்தி உதவும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகி மண்ணில் இருக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நியூசுலாந்தில் இந்த வீரிய மிக்க நுண்ணுயிரிக்கு பையேர்கரோ அங்கீகரிக்கப்பட்ட அங்ககப் பொருளாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

களை, பூச்சி மற்றும் நோய்களுக்கு வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள்
வீரிய மிக்க நுண்ணுயிரி பூச்சிக்கொல்லி கிடையாது. இது கரியமற்ற இரசாயனமாகும். மண் மற்றும் செடிகளில் புதிதாக பயனுள்ள நுண்ணுயிரியைப் பயன்படுத்தும் போது இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். பூச்சி மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இயற்கை மூலம் நுண்ணுயிரிகளின் உதவியால் எதிர்த்து கட்டுப்படுத்திவிடும்.

2.வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு

வீரிய மிக்க நுண்ணுயிரியில் உணவு தரம் உயிர்வளி மற்றும் உயிர்வளியற்ற நுண்ணுயிரிகள்: ஒளிச்சேர்க்கை பாக்டீரியா, லேக்டோபேசில்லஸ், ஸ்ட்ரெப்டோமைசிட்ஸ், ஏக்டினோமைசிட்ஸ், ஈஸ்ட், நுண்ணுயிரிகளின் திரிபு பொதுவாக நுண்ணுயிரி வைப்பகத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் இருக்கும். 1999ல் ஏழு சிறு தொழில் அங்கக உரப்பிரிவுகளில் வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படுவதை மையான்மாரில் பயன்படுத்துகின்றனர். இதை நடத்துவது பெண்களின் வளர்ச்சிக் குழு. பிரிவில் 9 குழிகள் உள்ளன.  அவை 180 செ.மீ. (நீளம்) 120 செ.மீ.(அகலம்) 90 செ.மீ.(ஆழம்) இவைகளை அடி சுவர் மூலம் சுற்றிக் கட்டி, மேல் கூரை போட்டு இருக்கும்.

மூலப்பொருட்கள்
  • அங்கக உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்
  • மாட்டு சாணம் - 2 பங்கு
  • நெல் உமி - 1 பங்கு
  • நெல் உமி - கரித்துண்டு - 1 பங்கு
  • நெல் தவிடு - 1 பங்கு
  • ஊக்கி - 33 லிட்டர் வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல் அல்லது ட்ரைக்கோடெர்மா கரைசல் குழி
3.வீரிய மிக்க நுண்ணுயிரியை தயாரிக்கும் முறை
ஒரு லிட்டர் முதலில் தயார் செய்து வைத்திருந்த கரைசல் இதில் 10 மி.லி வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல், 40 மி.லி. சர்க்கரைப்பாகு மற்றும் 950 மி.லி.தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதை வெப்பநிலையைப் பொருத்து 5-7 நாட்கள் வரை வைத்திருக்கவும். பின் அதில் 1 லி சர்க்கரைப்பாகு மற்றும் 93 லிட்டர்.  தண்ணீர் சேர்த்து 100 லிட்டர் வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசலை பயன்படத்த தயார் செய்யவும். இந்த அளவு மூன்று குழிகளுக்கு போதுமானது. இவை ஊக்கியாக பயன்பட்டு உரத்தின் காலத்தை மூன்று மாதத்தில் இருந்து ஒரு மாதமாகக் குறைந்துவிடும்.

செயல்முறை
ஊக்கியைத் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும். 15 செ.மீ. அளவு கலவையை குழிக்குள் பரவலாக ஊற்றவும். ஊக்கியை வைத்து தெளிக்க வேண்டும். இதே செயல்முறையை குழி நிரம்பும் வரை செய்யவும். ப்ளாஸ்டிக் தாளைக் கொண்டு குழியை மூடவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து முழுக் குழியும் உயிர்வளியுள்ள உரமாக தயாராகிவிடும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு உரம் பயன்படுத்த தயாராகிவிடும். ஒரு தொகுதிக்கு ஒரு குழியில் 900 கிலோ வரை உருவாகும். பொதுவாக ப்ளாஸ்டிக் பைகளில் 30 கிலோ வரை மூட்டைக் கட்டப்படுகின்றன.  30 நாட்களில் ஒரு தொகுதிக்கு உருவாகும். அதில் 8 குழிகள் மட்டும் தொழில்நுட்பத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு உற்பத்தியின் அளவு 86.4 டன்கள் (0.9 டன்கள் X குழிகள் X 12 மாதங்கள்).

மூலப்பொருட்கள்
  • உரம் தயாரிப்பதற்கான தேவையான மூலப்பொருட்கள்
  • நெல் வைக்கோல்
  • பண்ணை வெளி உரம்
  • யூரியா உரம்
  • வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல்
செயல்முறை
வைக்கோல் குவியல் 20 செ.மீ. உயரம், 1 மி அகலம் மற்றும் 5 செ.மீ. நீளம் என்ற அளவில் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி குவியலாக உருவாக்கவும். ஒரு பகுதி குவியல் 5 மீ (நீளம் ) X1 மீ (அகலம்) X1 மீ (உயரம்) என்ற அளவில் இருக்கவும். குவியலின் மேல் தண்ணீரை தெளிக்கவும் அப்பொழுது தான் சமமான ஈரப்பதம் கிடைக்கும். இதைத் தொடர்ந்து உரத்தின் அடுக்கை 5 செ.மீ உயர்வுபடுத்தவும். பின் கைநிறைய யூரியாவை (100-200.) தெளிக்கவும். வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசலை மையான்மாரில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை போலவே தயார் செய்யவும். அதை தெளித்தால் உயிர்வளியுள்ள உரமாக தயராகிவிடும்.
இந்த செயல்முறையை குவியல் 1 மீ உயர்வாக வரும் வரை தொடர்ந்து செய்யவும் பின் அதை ப்ளாஸ்டிக் தாளை வைத்து மூடி வைக்கவும். இந்தக் குவியல் இரண்டு வாரங்களில் திரும்பிவிடும் மறுபடியும் ஒரு வாரத்திற்குப் பின் திரும்பிவிடும். இரண்டு வாரத்திற்குப் பிறகு குவியல் குளிர்ந்தவுடன் குவியலின் உயரம் 70 செ.மீட்டராக குறைந்தவுடன் உரம் பயன்படுத்த தயாராகிவிடும்.

ஆதாரம்:
www.fao.org
http://www.ccc.govt.nz/