Monday, February 03, 2014

திருப்புத்தூரில் "சம்பங்கி' சாகுபடி

திருப்புத்தூர்,: திருப்புத்தூர் பகுதியில் சம்பங்கிப் பூ சாகுபடியை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.திருப்புத்தூர் பகுதியில் சம்பங்கிப் பூ சாகுபடி நடைபெற்றதில்லை. தற்போது, நெற்குப்பை பொசலான் என்ற விவசாயிதோட்டத்தில் சம்பங்கி சாகுபடித் துவக்கியுள்ளனர். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மலர்கள் உற்பத்தி திறன் அதிகரிக்க, இரண்டரை ஏக்கருக்கு, ரூ 45 ஆயிரம் மானியத்துடன் இச்சாகுபடியை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மூன்று மாதத்தில் பூக்கும் சம்பங்கிச் செடி சாகுபடிக்கு, முதலில் மண் உழவு செய்து, பின்னர், தொழு உரம்,குப்பையிட்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் அரை அடிக்கு முக்கால் அடி பாத்தி கட்டி, அதில் முக்கால் அடி இடைவெளியில் கிழங்கை நடவேண்டும். ஏக்கருக்கு 40 ஆயிரம் கிழங்குகள் தேவைப்படும்.அடுத்த, 15நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் டி.ஏ.பி. உரம் இடவேண்டும்.அடுத்த 20 நாட்களில்மேல் உரமாக பொட்டாஷ் இடவேண்டும்,மேலும்,யூரியா,வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம். வாரத்திற்கு இரண்டு தண்ணீர் விட வேண்டும். 90 நாட்களில், பூக்க துவங்கும். ஏக்கருக்கு 10 கிலோ வரை பூக்கும்.வாரத்திற்கு ஒரு முறை பறிக்கலாம்.மூன்று ஆண்டுகள் வரை பூக்கும். குறைவான தண்ணீர்,பராமரிப்பு செலவு கொண்ட சம்பங்கிப் பூ, திருப்புத்தூர் போன்ற பாசன வசதி குறைவான, மணல் கலந்த கரிசல் மண் மற்றும்
செம்மண் பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் என்று தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர்.
விபரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர்: 94436 20082, உதவி வேளாண் அலுவலர்: 9486276303 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
thanks to dinamalar

No comments: