கோவை மாவட்டத்தில் தற்போது அதிக வெயில் நிலவுவதால் மண் மற்றும் காற்றில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே விதையின் தரம் மற்றும் முளைப்புதிறன் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகள் விதை விற்பனை மையத்தில் இருந்து விதைகளை வாங்கி செல்லுகையில் அதிகமான வெயில்படாதபடி எடுத்துச்செல்ல வேண்டும். தோட்டத்தில் விதை இருப்பு வைக்கும் இடம், நேரடியாக சூரிய ஒளி படாதவாறு இருக்க வேண்டும். தக்காளி, மிளகாய் விதைகளை நடவு செய்யும் மேட்டு பாத்தி முறையில், பாத்தியை நன்றாக தண்ணீரில் நனைத்து விட்டு, விதைகளை நேர் வரிசையில் நடவு செய்ய வேண்டும்.மேட்டு பாத்தியை சூரிய ஒளி படாமல் நாற்று முளைக்கும் வரை, இயற்கை மூடாக்குகளான வைக்கோல்,தென்னை சோகைகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். பந்தல் காய்கறி சாகுபடியில் விதைகளை நேரடியாக விதைக்கும் போது, தண்ணீர் விட்டு மண் குளிர்ந்த பின் நடவு மேற்கொள்ள வேண்டும். மண்ணின் வெப்பத்தை தணிக்க இரண்டு நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு மேற்கொண்டால் விதையின் முளைப்பு திறன் சீராகவும், அதிகமாகவும் இருக்கும்.இத்தகவலை கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment