Sunday, May 11, 2014

மல்லிகை

  • நாட்டு மல்லி என்று அழைக்கப்படும் நாட்டு இரகம், பூ சிறியதாகவும், அதிக வாசனை உள்ளதாகவும் சிறிய காம்புள்ள மல்லிகைப்பூ வாசனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும், தொழுஉரம் அல்லது ஆட்டை கிடை போடுவதால் மண்ணின் வளத்தை சேமிக்கலாம்.
  • அனைத்து விதமான பூச்சிகளை கட்டுப்படுத்த, மல்லிகைக்கு, 1 கிலோ அரளி பழத்தை ஒரு நாள் நீரில் ஊறவிட்டு பின் அதை கசக்கி, சாறு எடுத்து அதை தண்ணீருடன் 1க்கு 10 என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
  • 5 கிலோ ‘ஒடுவன்தலை’ இலை, கிளைகளை 2 லிட்டர் நீரில் கொதித்து வைத்து, அது ஒரு லிட்டர் ஆக குறையும் வரை கொதிக்க வைத்து அதில் 50 மிலிக்கு 15 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மல்லிகைத்தோட்டத்திற்கு அடித்தால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
  •  நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு பவுடர் ஒவ்வொரு செடிக்கு இடவேண்டும்.
  • நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மல்லிகை செடியை கவாத்து செய்யும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினால், ஆடுகள் பழைய இலைகளை உண்டு விடும். இதனால் புதிய தளிர்கள் உருவாக வாய்ப்புக்கள் உண்டாக்கும்.

No comments: